ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் - அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் 62 எம்எல்ஏக்களில் மொத்தம் 53 பேர் மட்டுமே கலந்துகொண்டதாக ஆம் ஆத்மி எம்எல்ஏ சவுரப் பரத்வாஜ் தெரிவித்தார். அரவிந்த் கெஜ்ரிவால் அரசாங்கத்தை கவிழ்க்க பிஜேபியின் 'ஆபரேஷன் தாமரை' சூழ்ச்சி தோல்வியடைந்துவிட்டதாக பரத்வாஜ் தெரிவித்தார், மேலும் மற்ற எம்எல்ஏக்கள், தொலைபேசியில் தொடர்பு கொண்டு, "கடைசி வரை அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இருப்பதாக உறுதியளித்துள்ளனர் " என்று கூறினார்."

அரவிந்த் கெஜ்ரிவால் அரசாங்கத்தை கவிழ்ப்பதே பாஜகவின் முக்கிய இலக்காக உள்ளது. மேலும் 40 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களுக்கு தலா 20 கோடி ரூபாய் வழங்குவதாக பேரம் நடைபெற்றதாக ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். “எங்கள் 12 எம்எல்ஏக்களுடன் பாஜக தொடர்பு கொண்டு அவர்களை கட்சியை விட்டு விலகச் சொன்னது. 40 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட எங்கள் அரசை கவிழ்க்க நினைத்த அவர்கள், அவர்களுக்கு தலா 20 கோடி ரூபாய் வழங்குவதாக கூறியுள்ளனர்.

நேற்றைய கட்சி கூட்டத்திற்கு முன்பாக அரவிந்த் கெஜ்ரிவாலின் சந்திப்புக்கு முன்னதாக, ஆம் ஆத்மியின் பல எம்எல்ஏக்கள் தொடர்பில் இல்லாமல் போனதாக பதற்றம் நிலவியது.70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டசபையில், ஆம் ஆத்மி 62 எம்எல்ஏக்களுடன் பெரும்பான்மையுடன் உள்ளது, அதே நேரத்தில் பாஜகவுக்கு 8 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர், இது பெரும்பான்மைக்கு 28 குறைவு.