தமிழக அரசின் எதிர்ப்பை மீறி ஜிஸ்டி வரி உயர்த்தப்பட்டுள்ளது- பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வரிகள் உயர்த்தப்பட்டதற்கு தமிழக அரசு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்த பின்னரும் அரசியல் காரணங்களுக்காக தவறான செய்திகள் பரப்புவது கண்டிக்கத்தக்கதாகும் என்று தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி கவுன்சிலின் 45-வது கூட்டத்தில் வரி விகிதங்களை எளிமைப்படுத்தி வரிவிகிதங்களைமறுஆய்வு செய்து வரி வருவாயினைப் பெருக்குவதற்கான வழிமுறைகளை ஆராய அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் கர்நாடகா மாநில முதலமைச்சர் ஒருங்கிணைப்பாளராகவும், பீகார், கோவா, கேரளா, இராஜஸ்தான், உத் தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்காள மாநில அமைச்சர்கள் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டனர். இந்த குழுவில் தமிழ்நாடு உறுப்பினராக இடம் பெறவில்லை. இக்குழுவின் பரிந்துரைகளை அளித்த பின்னர், அப்பரிந்துரைகள் மீதான மாநில அரசுகளின் கருத்துகள் கேட்கப்பட்டன.

அரிசி, கோதுமை, தயிர், பன்னீர் மற்றும் வெல்லம் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் மீதான வரி பொது மக்கபரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள இயலாது என்று தமிழ்நாடு அரசால் 20.06.2022 நாளிட்ட கடித எண் 12680/ஆ1/2021,இல் ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு எழுத்துப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த ஜூன் மாதம் நடை பெற்ற 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் அமைச்சர்களின் குழுவால் சமர்ப்பிக்கப்பட்ட 56 பரிந்துரைகள் கொண்ட இடைக்கால அறிக்கை மன்றத்தின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டது. இந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது அனைத்தையும் நிராகரிக்க வேண்டும் என்ற முடிவு ஜிஎஸ்டி கவுன்சில் முன்வைக்கப்பட்டது. இதன் மீதான விவாதத்திற்குப் பின், அமைச்சர்கள் குழுவின் இடைக்கால அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. வரி விதிப்பு குறித்து மூன்று கட்டங்களில் இவ்வாறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதை ஒன்றிய நிதி அமைச்சர் அவர்களே குறிப்பிட்டுள்ளார்.

இது தான் உண்மைநிலை மேலும் இது தொடர்பாக அரசியல் காரணங்களுக்காக பல்வேறு தவறான செய்திகளை சிலர் பரப்பி வருவது கண்டிக்கத்தக்கதாகும். தமிழக அரசு தனது எதிர்ப்பைத் தெரிவித்த பின்னரும், மாநில மற்றும் ஒன்றிய அரசுகளின் கருத்தொற்றுமை முடிவின்படி விதிக்கப்பட்டுள்ள வரியால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்த உள்ளார்கள் ” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.